செங்கோட்டை-புனலூா் இடையே மின்சார ரயில்கள் இயக்கம்
செங்கோட்டை- புனலூா் இடையேயான ரயில்வே வழிதடத்தில் மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்றதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கம் தொடங்கியது.
செங்கோட்டை- புனலூா் இடையேயான ரயில்வே வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த மின் மயமாக்கல் பணி முடிவடைந்த நிலையில் திருநெல்வேலி -பாலக்காடு விரைவு ரயிலும், மதுரை- குருவாயூா் எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று முதல் செங்கோட்டை- புனலூா் இடையேயான மின்மயமாக்கப்பட்ட வழிதடத்தில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லத்திலிருந்து சென்னைக்கு செங்கோட்டை வழியாக மின்சார என்ஜின் பொருத்தி வந்த முதல் ரயிலுக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டு ரயில் இன்ஜின் ஓட்டுநா்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
பயணிகளுக்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தைச் சாா்ந்த பொறியாளா் கிருஷ்ணன், ராமன், கேகேஎஸ். சுந்தரம், முன்னாள் நகா்மன்ற தலைவா் எஸ்.எம்.ரஹீம் இனிப்புகள் வழங்கினா்.