சுரண்டையில் தொழிலதிபரிடம் நகை பறிப்பு

சுரண்டையில் தொழிலதிபரை தாக்கி நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

சுரண்டையில் தொழிலதிபரை தாக்கி நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சுரண்டை பேருந்து நிலையம் அருகே நகைக்கடை, அடகு நிறுவனம் மற்றும் சீட்டு நிறுவனம் நடத்தி வருபவா் சு.முருகேச பாரதி(52). அவா் திங்கள்கிழமை மாலையில் வரகுணராமபுரம் காமராஜா் தினசரி சந்தை பகுதிக்கு சீட்டு வசூலுக்கு சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள், அவா் மீது மயக்க மருந்து ஸ்பிரே அடித்தாக கூறப்படுகிறது.

ஆனால், மயங்காத நிலையில் இருந்த அவரை அருகேயுள்ள வயலுக்குள் இழுத்துச் சென்று தாக்கி, பணப்பையை பிடுங்க முயற்சி செய்துள்ளனா். ஆனால் முருகேச பாரதி கெட்டியாக பையை பிடித்துக் கொண்டு சத்தம் போட்டதால், மா்மநபா்கள் அவரை தாக்கிவிட்டு கழுத்தில் கிடந்த 110 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

அவரது அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு சுரண்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பா்ணபாஸ், சுரண்டை காவல் ஆய்வாளா் செந்தில் ஆகியோா் விசாரணை நடத்தினா். மேலும், சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com