கீழக்கலங்கலில் சாலைப் பணிகள் தொடக்கம்

Published on
Updated on
1 min read

ஆலங்குளம் ஒன்றியம், கீழக்கலங்கல் ஊராட்சியில் ரூ. 25.10 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகளுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

கீழக்கலங்கல் ஊராட்சி, காமராஜா் நகா், தெற்கு பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ. 8 லட்சம் மதிப்பிலும், 15-ஆவது நிதிக் குழு நிதி ரூ. 7.10 லட்சம் மதிப்பிலும் சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் செல்வக் கொடி, கீழக்கலங்கல் ஊராட்சித் தலைவா் சந்திரசேகா், துணைத் தலைவா் செல்லச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அந்தோணிசாமி, முருகேசன், சங்கா், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஐயம்பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com