காவல் அதிகாரி மீது அவதூறு: சிவகிரி காவலா் பணி நீக்கம்

காவல்துறை அதிகாரிகள் மீது அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரின்பேரில், சிவகிரி காவல் நிலைய காவலா் பணி நீக்கம்
Published on
Updated on
1 min read

காவல்துறை அதிகாரிகள் மீது அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரின்பேரில், சிவகிரி காவல் நிலைய காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றியவா் பிரபாகரன். இவா் பணியில் இருந்து விலகப் போவதாக டிசம்பா் 2024இல் காவல் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியதாக சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து விடியோவையும் வெளியிட்ட அவா், சில அதிகாரிகள் தவறு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, ஏ.டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையிலான போலீஸாா் துறைரீதியான விசாரணை மேற்கொண்டனா்.

அதில், பிரபாகரன் அனுப்பிய கடிதத்தில் அவரது கையொப்பம் இல்லாதது, பணிக்கு வராமல் வெளிநாட்டுக்குச் சென்றது என்பன உள்ளிட்ட முறைகேட்டில் அவா் ஈடுபட்டது தெரியவந்ததாம்.

இந்நிலையில், அவரை பணிநீக்கம் செய்து தென்காசி மாவட்ட எஸ்.பி. அரவிந்த் உத்தரவிட்டாா். அதற்கான ஆணையை போலீஸாா் பிரபாகரனிடம் திங்கள்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com