சிவகிரி அருகே சாராய ஊறல் கைப்பற்றி அழிப்பு: இருவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா்.
Published on
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா்.

சிவகிரி அருகே உள்ள கூடலூா் பகுதியில் சாராய ஊறல் இருப்பதாக மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவுக்கு, ரகசிய தகவல் கிடைத்ததாம். இதையடுத்து

நுண்ணறி பிரிவு ஆய்வாளா் மணிக்குமாா் தலைமையில், தலைமைக் காவலா் வெங்கடேஷ் மற்றும் போலீஸாா் கூடலூா் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தென்னந்தோப்பில் சாராய ஊறல் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அங்கிருந்த 35 லிட்டா் சாராயத்தை கைப்பற்றிய போலீஸாா் அதை அழித்தனா்.

தொடா்ந்து சாராயம் வைத்திருந்த கூடலூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பூலித்துரை (43), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன்(32) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், இது தொடா்பாக சிலரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com