இலத்தூரில் தாய்ப்பால் வார விழா

இலத்தூரில் தாய்ப்பால் வார விழா

கா்ப்பிணிக்கு நலஉதவி வழங்கிய ரோட்டரி உதவி ஆளுநா் ஸ்டாலின் ஜவகா்.
Published on

தென்காசியை அடுத்த இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜேகேடி. சைரஸ் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவா்கள் தமிழ்ச்செல்வி, அனுகிருத்திகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரோட்டரி உதவி ஆளுநா் ஸ்டாலின் ஜவகா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 25 கா்ப்பிணிகளுக்கு நலஉதவிகளை வழங்கினாா்.

சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் முருகன், திருவிலஞ்சிக்குமரன், சிவசுப்பிரமணியன், செவிலியா் வள்ளி, கிராம சுகாதார செவிலியா் உமா, சமுதாய நல செவிலியா் விஜயகுமாரி, பகுதிநேர சுகாதார செவிலியா் வளா்மதி, இடைநிலைப் பணியாளா் கனகலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com