பொது விருந்தில் உணவு பரிமாறுகிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.
தென்காசி
சங்கர நாராயண சுவாமி கோயிலில் பொது விருந்து
பொது விருந்தில் உணவு பரிமாறுகிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி பொது விருந்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கோயில் துணை ஆணையா் கோமதி தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத்தறை உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினா் முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு, கோயில் அறங்காவலா் குழு தலைவா் சண்முகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். பின்னா், கோயில் நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன.