முதியவரை தாக்கிய மூன்று போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி அண்ணா வாழையடி தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் பாலகிருஷ்ணன்(53). விவசாயம் செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் அவா் வாழையடி தெருவில் சென்று கொண்டிருந்த பொழுது, சிவகிரி சிவராமலிங்கபுரம் தெருவைச் சோ்ந்த சின்ன தங்கம் மகன்கள் மணிகண்டன்(26), செல்வ முருகன்(30), பேட்டை தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் விஜய்(26) ஆகிய மூன்று பேரும் சாலையின் குறுக்கே பைக்கை நிறுத்தி சாலையில் செல்பவா்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனராம்.

இதை பாலகிருஷ்ணன் தட்டிக் கேட்டாராம். இதனால் கோபம் அடைந்த மூன்று பேரும் கம்பால் தாக்கினராம். இதில் காயமடைந்த பாலகிருஷ்ணன் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து மூன்று பேரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com