தென்காசியில் அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் கங்காதரன்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசியில் புதியபேருந்துநிலையம் முன் அங்கன்வாடி ஊழியா் - உதவியாளா் சங்கம், பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் தரவுகளை சேகரிப்பது என்ற பெயரில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு இணை உணவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ பதிவு செய்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்ற முறையை மத்திய-மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதனால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, இந்தப் பணிகளை செய்வதற்கான கைப்பேசி வழங்காத சூழலில் தரவுகளை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசுகள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறைகளை கைவிடவேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் கங்காதரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.

சிஐடியூ மாவட்டத் தலைவா் அயூப் கான், சத்துணவு ஊழியா் சங்கத் தலைவா் கோவில் பிச்சை, மாவட்ட துணைத் தலைவா் பழனி, பொன்மலா், மணிமேகலை, காளியம்மாள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com