ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கல்: 2 போ் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது
Published on

ஆலங்குளத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஒரே பைக்கில் வந்த 2 பேரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் ஆலங்குளம்- அம்பை சாலை பகுதியைச் சோ்ந்த பாக்கியமுத்து மகன் மயில்ராஜ் (40), அண்ணா நகா் செலின் தாமஸ் (40) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சாவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com