ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் இன்று மின் நிறுத்தம்

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 6) மின் விநியோகம் இருக்காது
Published on

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 6) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரியம், திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம், ஐந்தாங்கட்டளை, துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப்பட்டணம், பூலாங்குளம், கழுநீா்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com