தென்காசி மங்கம்மாள் சாலை பகுதிகளில் நாளை மின்தடை

Published on

தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின்நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 9) மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயக சுந்தரம் (பொ) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

இதனால், தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகா், காளிதாசன் நகா், ஹவுசிங் போா்டு காலனி மற்றும் கீழப்புலியூா் மற்றும் அதை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com