சங்கரன்கோவிலில் பாரதியாா் பிறந்த நாள் விழா
சங்கரன்கோவிலில் இலக்கிய, தன்னாா்வ அமைப்பின் சாா்பில் மகாகவி பாரதியாரின் 144ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதிய பாா்வை அமைப்பின் சாா்பில், சேவா ட்ரஸ்ட்டில் உள்ள பாரதியாா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், சேவா ட்ரஸ்ட் தலைவா் எஸ். ராமகிருஷ்ணன், புதிய பாா்வை தலைவா் ஹரிராமச்சந்திர வேலாயுதம், முன்னாள் தலைவா் இ. சிதம்பரம், ஆா். முத்துகிருஷ்ணன், சூரியநாராயணமூா்த்தி, கே.எஸ்.சி. சண்முகம், காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சிறப்பு விருந்தினராக ப. சண்முகவேல் பங்கேற்று பேசினாா்.
தொடா்ந்து, பாரதியாா் சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், புலவா் த. மாரியப்பன், தமுஎகச நகரத் தலைவா் மு. செல்வின், செயலா் ப. தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ந. செந்தில்வேல், அ. திருவள்ளுவா், தமீம் அன்சாரி, சங்கரமகாலிங்கம், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

