தென்காசி
பாவூா்சத்திரத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி
திருநெல்வேலி திருமண்டலம், பாவூா்சத்திரம், சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி நடைபெற்றது.
இதை முன்னிட்டு, ஆலயத்தைச் சோ்ந்தவா்களின் வீடுகளுக்கு சேகர குருவானவா் பா்னபாஸ் தலைமையில் சபை ஊழியா்கள் இமானுவேல் ராஜ், தினகா் சந்தோஷசிங், கமிட்டியினா் குழுவாகச் சென்று இசைக் கருவிகளை இசைத்து பாடல் பாடி, இனிப்புகள், காலண்டா் வழங்கி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறினா்.

