பாவூா்சத்திரத்தில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ சேவை முகாம் சனிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இதில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு- மகளிா் நலம், குழந்தைகள் நலம், இதயவியல், இயன்முறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதியுள்ளோருக்கு ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
