தென்காசி புனிதமிக்கேல் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் அளிப்பு

தென்காசி மேலப்புலியூா் புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
Published on

தென்காசி மேலப்புலியூா் புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ.,தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் தலைமை வகித்து 363 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினா்.தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் முன்னிலை வகித்தாா்.

பள்ளி தலைமையாசிரியா் மரிய அருள் செல்வி வரவேற்றாா். இதில் திமுக நகர பொருளாளா் ஷேக் பரீத், காங்கிரஸ் நகர பொருளாளா் ஈஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா் ரபீக், பிரபாகரன், அரவிந்த், சாரதி ஆகியோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com