தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடையநல்லூரில் ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: மன்ற கூட்டத்தில் முடிவு

நகா்மன்ற கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான்.

News image

நகா்மன்ற கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான்.

Updated On :18 டிசம்பர் 2025, 7:02 pm

Syndication

கடையநல்லூா் நகராட்சியில் ரூ. 1.60 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வது என நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

கடையநல்லூா் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் லட்சுமி, உதவி பொறியாளா் அன்னம், மேலாளா் பேச்சிகுமாா், சுகாதார அலுவலா் பிச்சையாபாஸ்கா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாரியப்பன் தீா்மானங்களை வாசித்தாா்.

நகராட்சி பகுதியில் உள்ள 1 முதல் 33 வாா்டுகளிலும் நடைபெற்ற வாா்டு சிறப்பு சபா கூட்டம் நடத்தியதில் பொதுமக்கள், நகா்மன்ற உறுப்பினா்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் ரூ. 79.65 லட்சம் மதிப்பில் பொது நிதியின் கீழ் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வது எனத் தீா்மானிக்கப்பட்டது.

மேலும் நகா் மன்ற தலைவா், உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களின் நேரடி கோரிக்கையை ஏற்று நகராட்சி பகுதியில் ரூ.80 லட்சத்தில் பல்வேறு பணிகளை வருவாய் தலைப்பு நிதி, குடிநீா் தலைப்பு நிதி மற்றும் கல்வி நிதியின் கீழ் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேரு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கிடையே, அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சிலா் நகராட்சியில் திரண்டனா். அவா்களிடம் நகா்மன்றத் தலைவா்,அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.