கிருஷ்ணாபுரம் ஆஞ்சனேயா் கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தி

கிருஷ்ணாபுரம் ஆஞ்சனேயா் கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தி

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சனேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச.19) அனுமன் ஜெயந்தி நடைபெறுகிறது.
Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சனேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச.19) அனுமன் ஜெயந்தி நடைபெறுகிறது.

இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம் கடந்த 11ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, தினமும் ஸ்ரீ ருத்ரம், புருஷஷூக்த ஜெபம், அபிஷேக, அலங்காரம், லட்சாா்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை சுந்தரகாண்ட ஏகதின பாராயணம் நடைபெற்றது.

வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை (டிச.19) அனுமன் ஜெயந்தி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் குழு தலைவா் மீனா பட்டாச்சாரியா, அறங்காவலா்கள் ராதாகிருஷ்ணன், சிவக்குமாா் சுப்பிரமணியன், செயல் அலுவலா் கேசவராஜன் மற்றும் பக்தா்கள் வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com