மரக்கன்று நட்டாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா். உடன் மாவட்ட வனஅலுவலா் ராஜ்மோகன், தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்.
தென்காசி
தென்காசியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
மரக்கன்று நட்டாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா். உடன் மாவட்ட வனஅலுவலா் ராஜ்மோகன், தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமையவுள்ள பகுதி வளாகத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வனத்துறை மற்றும் கோத்தாரி இன்டஸ்ட்ரியல் காா்ப்பரேஷன் லிமிடெட், எக்ஸ்னோரா இன்டா்நேஷனல் மற்றும் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் சாா்பில் மரம் நடும் பசுமை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டாா்.
இதில், மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன், தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், ஒருங்கிணைப்பாளா் விஜயலெட்சுமி, தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை, குற்றாலம் பிரிவு வனவா்
சங்கர்ராஜா , பசுமைத் தோழா் பெஃரோலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

