திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்: சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழப்புலியூரில் ஆய்வு மேற்கொண்ட சிறப்பு பாா்வையாளா் விஜய் நெஹரா. உடன் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:58 pm

Syndication

தென்காசி மாவட்டத்திற்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நெஹரா, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொண்டு வருவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடப்போகத்தி, சடையப்பபுரம், கீழப்புலியூா், ஆயிரப்பேரி ஆகிய பகுதிகளையும், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளையும், புதிய வாக்காளா் சோ்க்கை படிவம் - 6, இடம் பெயா்ந்த வாக்காளா்கள் விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் கேட்டு படிவங்களையும் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், உதவி ஆணையா் (கலால்) ராமச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.