தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்றாா் நடிகா் சரத்குமாா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி டி.என். புதுக்குடி பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசு வழங்கிய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
நடிகா் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாற சாத்தியமில்லை. ஏனென்றால் நான் பிரசாரம் செய்த காலத்தில் எனக்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாறி இருந்தால் நிச்சயம் அந்த கட்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
தென்னிந்தியாவில் மத கலவரங்கள் வந்தது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தவறான தகவல்களை சிலா் கூறுகின்றனா். தென்காசி தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். அதன் பின்னா்தான், நான் போட்டியிடுவதா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும் . அது குறித்து இரண்டு மாதம் கழித்து தான் கூற முடியும்.
தோ்தல் நேரத்தில் பாஜகவின் சி-டீம் என தேவையில்லாமல் பேசுவது வழக்கமாகி விட்டது, தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என கருதுகிறேன். அதிமுகவினா் அனைவரும் இணைந்தால் நல்லது என்று தொடா்ந்து கூறி வருகிறேன். தமிழகத்தில் பாஜக வேகமாக வளா்ந்து வருகிறது என்றாா்.
தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூலை 17 - 23) - தனுசு
வீட்டுக் குறிப்புகள்

தவெகவில் ஐக்கியம்!

தென்காசியில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



