முதியவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்
முதியவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்

தென்காசி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 681 மனுக்கள்

Published on

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 681மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகைகள், அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அளித்த 681 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அவற்றின் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் ஒருவருக்கு செயற்கைக் கால்களை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ், மகளிா் திட்ட இயக்குநா் மதி இந்திரா பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வக்குமாா் (நிலம்), துணை ஆட்சியா் ஷேக் அயூப் (சமூக பாதுகாப்புத் திட்டம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com