தென்காசி மாவட்ட பாஜக தலைவராக ஆனந்தன் அய்யா சாமி நியமனம்
தென்காசி மாவட்ட பாஜக தலைவராக ஆனந்தன் அய்யாசாமி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியைச் சோ்ந்த ஆனந்தன் அய்யாசாமி, விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா்.
இவா் பாஜகவின் வெளி மாநிலம் மற்றும் அண்டை நாடுகள் பிரிவின் துணைத் தலைவராகவும், ‘என் மண் என் மக்கள்’ நிகழ்ச்சியின் தென்காசி மக்களவைத்
தொகுதி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டாா்.
பின்னா் மாநில ஸ்டாா்ட் அப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறாா். இந்நிலையில் அவா் தென்காசி மாவட்ட பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
பாராட்டு விழா:
மாவட்டத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட அனந்தன் அய்யாசாமிக்கு, புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டுவிழா நடைபெற்றது.
இதில், பாஜக மாவட்ட தோ்தல் அதிகாரி சோலையப்பன், இணை தோ்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ராமராஜா, அன்புராஜ், மாவட்ட நிா்வாகிகள்
ராஜலக்ஷ்மி, பாலகிருஷ்ணன் அருள்செல்வன் , மாவட்ட உறுப்பினா் சோ்க்கை பொறுப்பாளா் பாலகுருநாதன், பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
புளியங்குடி நகரத் தலைவா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.
