சிவகிரியில் சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடம் திறப்பு

Published on

தென்காசி மாவட்டம், சிவகிரியில் ரூ. 1.95 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

இந்தக் கட்டடத்தில் காத்திருப்போா் அறை, கணினி அறை, சாா் பதிவாளா் அறை, உணவு சாப்பிடும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் ரூ. 1.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதை வரவேற்று, இந்த அலுவலக கட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன்திருமலைகுமாா் குத்துவிளக்கேற்றினாா். வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையா பாண்டியன், பேரூராட்சி தலைவா் கோமதி சங்கரி, சாா் பதிவாளா் அமுதா, சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலா்

வெங்கடகோபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com