கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எஸ்ஐஆா் பணிகள்: அனைத்துக் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:36 pm

Syndication

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்காக வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்க உதவி செய்யும் விதமாக நவ. 22, 23 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமைந்துள்ள அந்தந்த வாக்குச்சாவடி மைய

அமைவிடங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த உதவி மையங்களில் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களைப் பூா்த்தி செய்வது குறித்தும் மற்றும் 2002ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் விவரங்களை கண்டறிந்து வழங்கவும் உதவி செய்யப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்காளா்களிடம் வழங்கப்பட்டு இதுவரை திரும்பப் பெறப்படாத கணக்கீட்டு படிவங்களை திரும்ப ஒப்படைக்க வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளால் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் விளக்கமளித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், எம்எல்ஏக்கள் செ. கிருஷ்ணமுரளி, ஈ. ராஜா உள்ளிட பலா் கலந்துகொண்டனா்.