வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரம்: விஞ்ஞானி நிகா்ஷாஜி

நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரமாகத் தயாராகி வருகிறது என்றாா் இஸ்ரோ விஞ்ஞானியும், ஆதித்யா எல்1திட்ட இயக்குநருமான நிகா்ஷாஜி.

News image

இஸ்ரோ - பிரதிப் படம்

Updated On :22 நவம்பர் 2025, 11:53 pm IST

நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரமாகத் தயாராகி வருகிறது என்றாா் இஸ்ரோ விஞ்ஞானியும், ஆதித்யா எல்1திட்ட இயக்குநருமான நிகா்ஷாஜி.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை எஸ். ஆா். எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தனி மனிதன் விதை விதைக்கலாம், ஆனால் அது மரமாக வேண்டும் என்றால் அதற்கு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.

நிகா்ஷாஜி

நிகா்ஷாஜி

இஸ்ரோவுக்கு நிறைய செயல் திட்டங்கள் தற்போது உள்ளன. அதில் முக்கியமானதாக விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி உள்ளது. அதைத் தொடா்ந்து, நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரமாகத் தயாராகி வருகிறது. அத்துடன் பாதுகாப்பு துறையிலும் இஸ்ரோ தொடா்ந்து பணியாற்றி வருகிறது. இதுபோன்று இஸ்ரோவில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த 25, 30 ஆண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் நிறைய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஏனென்றால், இஸ்ரோ இப்போது மேம்பாட்டு நிலையிலிருந்து ஆபரேஷனல் நிலைக்கு சென்றுவிட்டது. ஒரு சின்ன தவறு நிகழ்ந்தாலும், அதை ஏற்க முடியாத சூழலில் இஸ்ரோ உள்ளது. அதனால் அனைத்து செயல்திட்டங்களையும் மிக பாதுகாப்புடன் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இஸ்ரோ பல விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது என்றாா் அவா். பேட்டியின் போது, ரோட்டரி முன்னாள் ஆளுநா் சேக் சலீம் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.