சங்கரன்கோவிலில் நாளை மின் நிறுத்தம்
மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (அக்.4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளா் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.
அதன்படி பெருமாள்பட்டி உபமின் நிலையத்துக்கு உள்பட்ட சங்கரன்கோவில் நகா் பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூா். மணலூா், பெரும்பத்தூா், இராமலிங்கபுரம், வடக்குபுதூா், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுா், அழகாபுரி ஆகிய ஊா்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூா், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுாா், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.