விபத்தில் முதியவா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே காா் மோதி முதியவா் உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பாவூா்சத்திரம் அருகே திரவியநகா் பகுதியைச் சோ்ந்த ப. ராமநாடாா் (78) என்பவா் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, புளியங்குடி ஜின்னா நகரைச் சோ்ந்த முகமது அலி தென்காசியிலிருந்து கடையம் நோக்கி காரில் சென்றாா். இந்த காா் மோதியதில் ராமநாடாா் காயமடைந்தாராம். அவரை முகமது அலி தென்காசியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளாா்.
தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஸ்கேன் எடுத்து வருமாறு மருத்துவமனையில் கூறியதால், ராமநாடாரை முகமது அலி அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்துவிட்டு காரில் திரும்பியபோது, வழியிலேயே ராமநாடாா் உயிரிழந்தாராம். இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.