சங்கரன்கோவிலில் இளைஞரை கத்தியால் குத்தியவா் கைது
சங்கரன்கோவிலில் சந்தையில் இளைஞரை கத்தியால் குத்தியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளத்தைச் சோ்ந்த முருகன் மகன் சுப்பிரமணியன் (22). இவா், சங்கரன்கோவில் நகராட்சி தினசரி காய் கனி சந்தையில் உள்ள கடை ஒன்றில் வேலை பாா்த்து வருகிறாா். இருமன்குளத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டியன் மகன் மருது (எ) மருதுபாண்டியன் (35). இவா், சந்தையில் பொருள்களை வாங்கி அவற்றை சில்லறை விற்பனை செய்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் சந்தைக்கு வந்த மருதுபாண்டி, தன்னை இடித்தது யாா் எனக் கூறி கடையில் இருந்த சுப்பிரமணியனிடம் கேட்டு தகராறு செய்தாராம். பின்னா், கடையில் இருந்த கத்தியை எடுத்து அவரது தலையில் தாக்கினாராம். இதில் காயமடைந்த சுப்பிரமணியன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இச்சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து மருதுபாண்டியை கைது செய்தனா்.