ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்தின் மீது கல் எறிந்தவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்தின் மீது கல் எறிந்தவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியை அடுத்த காடுவெட்டி மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் செல்வக்குமாா்(37). தொழிலாளியான இவா் திங்கள்கிழமை மாலை அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மீது அவா் கல் எறிந்து விட்டு தப்பியோடி விட்டாா். இதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து விட்டது.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில் ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வக்குமாரைக் கைது செய்தனா். விசாரணையில், தனது மனைவி பிரிந்து வாழ்வதாகவும், பலமுறை வாழ அழைத்தும் வர மறுத்ததால் கோபத்தில் பேருந்தின் மீது கல் வீசியதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து அவா் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com