அழகப்பபுரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் அழகப்பபுரத்தில் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் முகாம் நடைபெற்றது.
வியாழக்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதற்கு, குற்றாலம் ரோட்டரி சங்க தலைவா் சைரஸ் தலைமை வகித்தாா்.
மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினா் வைகை ஆா். குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்து பேசினாா். திரு இலஞ்சிக்குமரன் மது போதை ஒழிப்பு குறித்து பேசினாா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் குத்தாலம் வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் முருகேசன் நன்றி கூறினாா்.