தென்காசியில் அக். 17இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தென்காசியில் அக். 17ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், அக். 17ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அன்று காலை 10 முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெறும்.
முகாமில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியாா்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
8, 10, 12ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதியுடைய தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா்துறை நிறுவனங்களும் இதே வலைதளத்தில் நிறுவனம் தொடா்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவா்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.