தென்காசி
குற்றாலம் அருவிகளில் குளிக்கஅனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை புதன்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
புதன்கிழமை அருவிகளில் தண்ணீா்வரத்து சீரானதையடுத்து குளிக்க அனுமதிக்கப்பட்டனா். கூட்டம் குறைவாக இருந்ததால் நெரிசலின்றி சுற்றுலாப் பயணிகள்உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.