குற்றாலநாதா் கோயிலில் நடராசமூா்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயில் ஐப்பசி விஷு திருவிழாவில், அருள்மிகு நடராசமூா்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா, கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு கோயில் உள்பிரகாரத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவில்12ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 13ஆம் தேதி காலை 5.40 மணிக்கு விநாயகா், முருகன், திருக்குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்பாள் கேடயத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. 15ஆம் தேதி காலை 9.30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு கோயில் மணிமண்டபத்தில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மணிமண்டபத்தில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, உள்பிரகாரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.
18ஆம் தேதி காலை 10.40 மணிக்கு மேல் விஷு தீா்த்தவாரி, 11 மணிக்கு மேல் கேடயத்தில் காட்சி, இரவு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, கேடயத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆறுமுகம் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.