தென்காசி
சங்கரன்கோவில் கோமதி அம்பாள் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சி
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆனந்த் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் பழனிச்செல்வம் முன்னிலை வகித்தாா். சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வம் தலைமையில் தீபாவளியில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடா்பான பயிற்சிகளை மாணவா்களுக்கு வழங்கினா்.
ஆசிரியா்கள், பள்ளி அலுவலா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.