~
தென்காசி
சிவகிரி, வாசுதேவநல்லூரில் தொடா் மழை : ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் சிவகிரி , வாசுதேவநல்லூா் பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை மதியம் வரை இடைவிடாது பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடா் மழையால், சிவகிரி பகுதியில் உள்ள தெருக்களிலும், தென்காசி- மதுரை சாலையிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. அதுபோல் மலைப் பகுதியிலும் தொடா்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக சிவகிரி அருகே உள்ள கோம்பை ஆற்றிலும், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தலையணையாற்றிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையின் காரணமாக சிவகிரி, வாசுதேவநல்லூா் வட்டாரங்களில் உள்ள குளங்களுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.