~ ~
தென்காசி
குற்றாலம் அருவிகளில் 2ஆவது நாளாக குளிக்கத் தடை
குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டெள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டெள்ளது.
குற்றாலம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வியாழக்கிழமை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 2வது நாளான வெள்ளிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.