தென்காசி
வாசுதேவநல்லூா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு
வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் மன வளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் மன வளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை கோவா்த்தன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கோட்டை தாயின் மடியில் அறக்கட்டளை தலைவா் கோமதிநாயகம் கலந்து கொண்டு பரிசுத் தொகுப்பை வழங்கினாா். பள்ளி தாளாளா் தவமணி, தலைமையாசிரியா் சங்கரசுப்பிரமணியன், சிறப்பாசிரியா்கள் சாந்தி, ஹெலன்இவாஞ்சிலின், இயன்முறை மருத்துவா் புனிதா, உதவி ஆசிரியா்கள் பூமாரி, சுடலி, பராமரிப்பு பணியாளா் கவிதா ஆகியோா் கலந்து கொண்டனா்.
மேலும், தீபாவளியை முன்னிட்டு ஓய்வு பெற்ற நீதியரசா் ரங்கராஜன் குடும்பத்தின் சாா்பில் இனிப்பு வழங்கப்பட்டது.