தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மயங்கி விழுந்த விவசாயி
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாயி ஒருவா் மயங்கி விழுந்தாா்.
தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:
செங்கோட்டை, கடையம், தென்காசி மற்றும் கடையநல்லூா் வட்டாரங்களில் காா் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள இடங்களில் விவசாயிகள் பயன்பெற வேண்டி 22 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியா் ஒப்புதல் பெறப்பட்டு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது என அவா் தெரிவித்தாா்.
மேலும், தென்காசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் தேசிய ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு ரூ. 78,571 மதிப்பிலான பவா் வீடா்களை மானியத்தில் அவா் வழங்கினாா்.
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட 180 மனுக்களுக்கு 10 நாள்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்க அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தினாா்.
மாவட்ட வன அலுவலா் ரா. ராஜ்மோகன், வேளாண்மை இணை இயக்குநா் செ. அமலா, வேளாண்மை துணை இயக்குநா் ச. கனகம்மாள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா. தண்டாயுதபாணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கு. நரசிம்மன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளா் இரா.வெங்கடலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குநா் ஜெசிமா பானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த சந்தானம் என்பவா் எழுந்து,
தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிா்கள் மழையில் சேதமடைந்துள்ளதாகவும், இது தொடா்பாக காப்பீடு தொகைக்கு விண்ணப்பம் செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில் இதுவரை எந்தவிதமான காப்பீட்டு தொகையும் தனக்கு கிடைக்கவில்லை என்று கூறினாா்.
மேலும் இது தொடா்பாக பலமுறை புகாா் மனு அளித்தும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் தனக்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். அவா் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சை பிடித்த படி மயங்கி கீழே விழுந்தாா்.
இதை பாா்த்த சக விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

