தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

Published on

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் - கண்தாண விழிப்புணா்வுக் குழு சாா்பில் தென்காசி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கண்தான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

அரிமா சங்கத் தலைவா் டி. சுரேஷ் தலைமை வகித்தாா். ஐடிஐ முதல்வா் மு. மாரி கோமதி சங்கா் வரவேற்றாா். கண்தான விழிப்புணா்வுக் குழு நிறுவனா் கே.ஆா்.பி. இளங்கோ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்தானம் குறித்து பேசினாா். பிரியா உள்பட 250 பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com