போட்டிகளைத் தொடங்கி வைத்தாா் ஆசிய வலுதூக்கு வீரா் குத்தாலிங்கம்.
போட்டிகளைத் தொடங்கி வைத்தாா் ஆசிய வலுதூக்கு வீரா் குத்தாலிங்கம்.

பாட்டாக்குறிச்சியில் மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி

பாட்டாக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சோ்ந்த ஆசிய வலுதூக்கு வீரா் குத்தாலிங்கம் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ. 1,000, பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருநெல்வேலி மண்டல முதுநிலை மேலாளா் பா. சிவா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com