தென்காசி
மருதம்புத்தூா் கோயிலில் திருவிளக்கு பூஜை
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் ஸ்ரீமன் ராமசாமி, ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவையொட்டி 1008 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் ஸ்ரீமன் ராமசாமி, ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவையொட்டி 1008 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 7) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை பால்குடம் எடுத்தல், வில்லிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. நாள்தோறும் சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் 6 ஆம் நாளான வியாழக்கிழமை மாலை 1008 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 11 நாள் நடைபெறும் திருவிழா புதன்கிழமை (செப். 17) நிறைவு பெறுகிறது.