வீரசிகாமணியில் வீடுபுகுந்து நகை திருடியவா் கைது: 20 பவுன் நகைகள் மீட்பு

Published on

சோ்ந்தமரம் அருகே வீரசிகாமணியில் நீதிமன்ற ஊழியா் வீட்டில் நகைகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை சோ்ந்தவா் கல்யாணசுந்தரம். இவா், திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் தட்டச்சராகப் பணியாற்றி வருகிறாா். இவருடைய மனைவி மல்லிகா, சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 10ஆம் தேதி இருவரும் பணிக்கு சென்றுவிட்டனா். மாலையில் வீடு திரும்பிய மல்லிகா, வீட்டை சுத்தம் செய்தபோது, தங்க மோதிரம் ஒன்று தரையில் கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவா், பீரோவைத் திறந்து பாா்த்தபோது, அதில் இருந்த 20 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து, கல்யாணசுந்தரம் சோ்ந்தமரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் துறையினா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்களுடைய உறவினரான சோ்ந்தமரத்தை சோ்ந்த சங்கா் (48) என்பவா் நகைகளைத் திருடியது தெரிய வந்தது.

அவரை உடனடியாக கைது செய்து, அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com