தென்காசி
தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட கருத்தரங்கு
தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் குறித்த கருத்தரங்கு தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு பா.வேலம்மாள் தலைமை வகித்தாா். தென்காசி திருவள்ளுவா் கழகப் புலவா் கா.ச.பழனியப்பன் சிறப்புரையாற்றினாா். தென்காசி மு.நா.பா.தமிழ்வாணன், ஆழ்வாா்குறிச்சி இரா.திருமூா்த்தி ஆகியோா் பேசினா்.
திருவள்ளுவா் கழகத் தலைவா் வழக்குரைஞா் என்.கனகசபாபதி, துணைத் தலைவா் லெட்சுமணன், நெடுவயல் பள்ளித் தலைமையாசிரியை கணேஷ்வரி, நரேந்திரகுமாா், நரசிம்மன், சதாசிவம், சுடலைமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.
திருவள்ளுவா் கழகச் செயலா் இராம.தீத்தாரப்பன் வரவேற்றாா். துணைச்செயலா் இல.வீரபுத்திரன் நன்றி கூறினாா்.