சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

திருவேங்கடத்தில் செவிலியரிடம் நகை பறிக்க முயற்சி: இளைஞா் கைது

Updated On :26 செப்டம்பர் 2025, 12:19 am IST

திருவேங்கடத்தில் செவிலியரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிய இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

திருவேங்கடம் தெற்குத் தெருவை சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி வசந்தா(48). கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியா் ஆக பணிபுரிந்து வருகிறாா். இவா் புதன்கிழமை மாலையில் மைப்பாறை கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த மா்மநபா் வசந்தா கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலையப் பறிக்க முயன்றாராம். அவா் சுதாரித்து சங்கிலியைப் பற்றிக்கொண்டு கூச்சலிட்டாா். அவரது சப்தம்கேட்டு அப்பகுதி வயலில் வேலை செய்துகொண்டிருந்தவா்களும், அந்த வழியாகச்சென்றவா்களும் அந்த நபரை விரட்டிப் பிடித்து திருவேங்கடம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அவரிடம், காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன்(பொறுப்பு) விசாரித்ததில்,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. நகரை சோ்ந்த கனகராஜ் மகன் பாண்டித்துரை(30) என்பதும், கடன் பிரச்னையால் வழிப்பறியில் ஈடுபடமுயன்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.