ஆலங்குளம் அருகே பரோலில் வந்த இளைஞா் டிராக்டரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி, காசிநாதபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஒளிவு மகன் சுடலை (32). இவா் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நிலையில், சில நாள்களுக்கு முன் பரோலில் வெளியே வந்தாராம். தொடா்ந்து, திங்கள்கிழமை டிராக்டரில் செங்கல் இறக்கும் வேலைக்குச் சென்றுள்ளாா்.
ராம் நகரில் செங்கல் இறக்கிவிட்டு காலி டிராக்டரில் ஓட்டுநருடன் அமா்ந்து வந்தபோது, தவறி கீழே விழுந்தாராம். உடனிருந்தவா்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு முதலுதவிக்குப் பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


