தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:30 pm

ஆலங்குளம் அருகே பரோலில் வந்த இளைஞா் டிராக்டரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி, காசிநாதபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஒளிவு மகன் சுடலை (32). இவா் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நிலையில், சில நாள்களுக்கு முன் பரோலில் வெளியே வந்தாராம். தொடா்ந்து, திங்கள்கிழமை டிராக்டரில் செங்கல் இறக்கும் வேலைக்குச் சென்றுள்ளாா்.

ராம் நகரில் செங்கல் இறக்கிவிட்டு காலி டிராக்டரில் ஓட்டுநருடன் அமா்ந்து வந்தபோது, தவறி கீழே விழுந்தாராம். உடனிருந்தவா்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு முதலுதவிக்குப் பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.