ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஊத்துமலையில் டிடிவி தினகரன் பிரசாரம்

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் சனிக்கிழமை ஊத்துமலையில் பிரசாரம் செய்தாா்.

News image

தென்காசி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு ஆதரவாக ஊத்துமலையில் பிரசாரம் செய்த டி.டி.வி. தினகரன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 10:27 pm

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் சனிக்கிழமை ஊத்துமலையில் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் இதற்கு தீா்வு கிடைக்கும்.

ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இணைந்துள்ளோம். திமுக ஆட்சியில் அவா்கள் கூறிய ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

மின்சார கட்டணத்தை 67 சதவீதம் உயா்த்தியதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தென்காசியில் ரூ. 119 கோடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அது திறக்கப்படும், மேலும் ஆலங்குளம் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து ஊத்துமலையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்றாா் அவா்.