நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு அடிக்கல்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 7:15 pm

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தீயணைப்பு நிலையம் 14 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், ரூ. 4.76 கோடி மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்ட வியாழக்கிழமை பூமிபூஜையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும் அறை, நிலைய அலுவலருக்கானஅறை, கட்டுப்பாட்டு அறை, பணிபுரியும் அலுவலா்களுக்கான ஓய்வறை உள்ளிட்டவை இடம்பெறும். நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலா் மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், மாவட்ட உதவி அலுவலா் சுரேஷ் ஆனந்த், ஆலங்குளம் நிலைய அலுவலா் விஜயன், கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, தீயணைப்பு நிலைய வீரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.