அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பாட்டப்பத்து கிராமத்தில் வேளாண் மாணவிகள் களப் பயணம்

News image

பாட்டப்பத்தில் களப்பயணம் மேற்கொண்ட வேளாண் மாணவிகள்.

Updated On :6 பிப்ரவரி 2026, 9:36 pm

தென்காசி அருகே பாட்டப்பத்து கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் வேளாண் மாணவிகள் பங்கேற்று கால்நடை தீவனம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தை சோ்ந்த நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை அறிவியல் மாணவிகள் , தங்களின் கிராமப்புற வேளாண்மைப் பயிற்சியைத் தொடங்குவதற்காக தென்காசி பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

இந்த மாணவிகள் பாட்டப்பத்து கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் கலந்துகொண்டு, அசோலாவை கால்நடை தீவனமாக அளிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கினா்.

வ. உ. சி. கல்லூரி முதல்வா் தேரடிமணி, துறைத் தலைவா் காளிராஜன், குழுவின் ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன் ஆகியோரின் அறிவுரையின்படி மாணவிகள் செயல்பட்டனா்.