மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 3ஆவது நாளாக தொடா் காத்திருப்பு போராட்டம்

News image
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்.
Updated On :7 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஒரு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தென்காசியில் தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.

முழுநேர பணியாளா்களாக உள்ள கிராம உதவியாளா்களுக்கு டி கிரேடு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினா்.

ஆா்ப்பாட்டத்தின் 3ஆவது நாளான சனிக்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், மாவட்டச் செயலா் சிவசுப்பிரமணியன்,பொருளாளா் லிங்கேஷ், மாநில துணைத் தலைவா் வி. சுப்பிரமணியன், மாநில கௌரவ தலைவா் சண்முகசுந்தரபாண்டியன், கோட்ட துணைத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.